Saturday, 4 January 2020

அஞ்சாதே ஆரமுதே


கண்ணில் ஏனிந்த
கண்ணீர் கண்மணி
பூஞ்சோலையில் ஏன் இன்று
புயல் காற்று

உன் நெற்றி சுருங்கி
புருவங்கள் நெறித்தால்
காரிருள் மேகம்
சூழுதென் உலகு

பிணியோ சிறு வலியோ
உனக்கெதும் நேர்ந்தால்
துவண்டு தவிக்குதென் மனது

இனிய பொழுதுகளில்
உன்னோடிருந்தவன்
இடர் வரும் வேளையில்
பிரிந்திடுவேனா

மாளாத் துயர் வரினும்
உலகே தகர்ந்திடினும்
வானே பிளந்திடினும்
கலங்காதே என் காதலி

கொடியவர் வஞ்சகர்
எவர் முன் நின்றாலும்
உன்னோடிருப்பேன்
நான் அகலாது

அஞ்சாதே என் ஆரமுதே
என தலைகோதி
கற்கண்டே உன்
கரம் கோர்த்திருப்பேன்

இருள் அகலும் வரையிலும்
என் தோள் மீது
உன் முகம் சாய்த்திருப்பேன்

என்னுயிர் ஈந்தேனும்
உனை நான்
காத்திடுவேன் கண்மணியே

No comments: