காதலுற்றதால் வரும்
துயரை விட
அதைச் சொல்லில்
வடிப்பதே பெரும்
வேதனையூட்டுதடி
அத்தனை வலி தாங்கியும்
அனுதினமும்
காரணம் பல்லாயிரம்
சொல்வேன்
கண்மணி மேல்
காதல் வர
அதில் ஒன்றேனும்
ஓர் முறை சொல்டி
என்னிடத்தில் நீ
காதல் கொள்ள
நிற்பதற்கும் நேரமின்றி
நிரம்பி நிற்கும்
உன் நாட்குறிப்பில்
எனக்கென
சில மணித்துளி
தரமாட்டாயா
திருமகள் திருமுகம்
எளியவன்
திசை பாராதா
கண்ணில் தெரியும்
உன் காதல்
சொல்லில் வாராதா
பாலைப் பெருநிலம் கடக்கும்
வறியவன் நான்
கானல் காட்சியென
உன் காதல் தெரியுதடி
குவளையில் நீர் உண்டென
அறிந்தென்ன பயன்
அடித் தொண்டை
நனையும் வரை
தணல் வெப்பத்தில் காய்ந்தும்
கண்ணீரில் தோய்ந்தும்
நிதம் மனம் நோகுதடி
உன் செவ்வாய்
மலர்ந்து ஒவ்வோர்
நாளும் காதல் சொல்லடி
உலரும் என் உயிர்
சிறு துளிர் விடும்.
துயரை விட
அதைச் சொல்லில்
வடிப்பதே பெரும்
வேதனையூட்டுதடி
அத்தனை வலி தாங்கியும்
அனுதினமும்
காரணம் பல்லாயிரம்
சொல்வேன்
கண்மணி மேல்
காதல் வர
அதில் ஒன்றேனும்
ஓர் முறை சொல்டி
என்னிடத்தில் நீ
காதல் கொள்ள
நிற்பதற்கும் நேரமின்றி
நிரம்பி நிற்கும்
உன் நாட்குறிப்பில்
எனக்கென
சில மணித்துளி
தரமாட்டாயா
திருமகள் திருமுகம்
எளியவன்
திசை பாராதா
கண்ணில் தெரியும்
உன் காதல்
சொல்லில் வாராதா
பாலைப் பெருநிலம் கடக்கும்
வறியவன் நான்
கானல் காட்சியென
உன் காதல் தெரியுதடி
குவளையில் நீர் உண்டென
அறிந்தென்ன பயன்
அடித் தொண்டை
நனையும் வரை
தணல் வெப்பத்தில் காய்ந்தும்
கண்ணீரில் தோய்ந்தும்
நிதம் மனம் நோகுதடி
உன் செவ்வாய்
மலர்ந்து ஒவ்வோர்
நாளும் காதல் சொல்லடி
உலரும் என் உயிர்
சிறு துளிர் விடும்.
No comments:
Post a Comment