எழுத்துக் கூட்டிப் படிக்கிறாய்
பேசிப் பழகும்
குழந்தை போல்
கொஞ்சிப் பேசி
வார்த்தை சரிதானே
என சிரிக்கிறாய்
ஓதுவார் பாட்டினிலோ
பாவலர் கற்பனையினிலோ
எவருக்கும் எட்டாத
புது வார்த்தைகள்
நிதம் புனைகிறாய்
தோழன் எனை
தீந்தமிழில்
கவி எழுது
வேறு மொழி வேண்டாம்
தாயிருக்க செவிலி
எதற்கு நண்பா
எனக் கடிந்துரைத்தான்
உயிர் ஊற்றி
கவி வளர்த்தென்ன
பயன் நண்பா
என் கண்மணிக்கு புரியாதெனில்
எனத் தேற்றினேன்
உன்னிடத்தில்
இதைச் சொல்லி
நகைத்தேன்
என் கண்ணா
வார்த்தைகள்
புரிகிறதோ அன்றோ
கண்மணிக்கு
உன் காதல்
புரியும் என்றாய்
தமிழ் பிழைத்ததோ அன்றோ
நிச்சயம் காதல் பிழைத்தது.
பேசிப் பழகும்
குழந்தை போல்
கொஞ்சிப் பேசி
வார்த்தை சரிதானே
என சிரிக்கிறாய்
ஓதுவார் பாட்டினிலோ
பாவலர் கற்பனையினிலோ
எவருக்கும் எட்டாத
புது வார்த்தைகள்
நிதம் புனைகிறாய்
தோழன் எனை
தீந்தமிழில்
கவி எழுது
வேறு மொழி வேண்டாம்
தாயிருக்க செவிலி
எதற்கு நண்பா
எனக் கடிந்துரைத்தான்
உயிர் ஊற்றி
கவி வளர்த்தென்ன
பயன் நண்பா
என் கண்மணிக்கு புரியாதெனில்
எனத் தேற்றினேன்
உன்னிடத்தில்
இதைச் சொல்லி
நகைத்தேன்
என் கண்ணா
வார்த்தைகள்
புரிகிறதோ அன்றோ
கண்மணிக்கு
உன் காதல்
புரியும் என்றாய்
தமிழ் பிழைத்ததோ அன்றோ
நிச்சயம் காதல் பிழைத்தது.
